நீர்க்குட்டையாகி
உன் நிலவொளியில் மயங்கிக் கிடக்கிறேன்
பறித்து வைத்திருந்த
என் நட்சத்திரங்களுள் ஒன்றை
உள்ளங்கையில் ஏந்தி
களிப்புடன் இருக்கிறாய்
நம் சந்திப்புக்காகக்
காத்திருந்த ஜீவ நதி
இருளையும் வெளிச்சத்தையும் கடந்து
ஓடிக்கொண்டிருக்கிறது
Wednesday, October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நல்லாயிருக்கு..!
நல்லாயிருக்குங்க...
//காத்திருந்த ஜீவ நதி
இருளையும் வெளிச்சத்தையும் கடந்து
ஓடிக்கொண்டிருக்கிறது //
:)
மாதவராஜ், நித்திலம், அசோக்
மூவருக்கும் என் நன்றி.
இறந்த காலத்தில் (நீர்க்குட்டையாகி) ஆரம்பித்து
நிகழ் காலத்தில் ( மயங்கிக் கிடக்கிறேன்) நின்று
எதிர் வரும் காலத்தையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது மண்குதிரை
ரொம்ப நல்லாயிருக்கு
//நீர்க்குட்டையாகி உன் நிலவொளியில் மயங்கிக் கிடக்கிறேன்//
பல்வேறு திசைக்காக பயணங்களை உள்ளடக்கிய படிமம். நல்ல கவிதை. வாழ்த்துகள் மண்குதிரை
அட!
வேல்கண்ணன், அருணா, லாவண்யா
நன்றி.
Post a Comment