
காட்சிகள்
எத்தனை துல்லியமாகிவிட்டன
பல்லாயிரம் வண்ணங்களுடையதாய்
மிகத் தெளிவாகிவிட்டன
நிகழ்விலிருந்து விலகிச் சென்றுவிட்ட மலர்களும்
அதன் இயல்பான அழகோடு மணம் வீசுகின்றன
சூரியன் எழுந்து வரும் காலையையும் தாண்டித்
துழவி முயங்குகிறது பிரக்ஞை
சரி.., இந்தச் சட்டகங்களுக்குள்
வெண்பனி சூழ்ந்த முதல் சித்திரம் எது?
11 comments:
//வெண்பனி சூழ்ந்த முதல் சித்திரம் எது? //
:)
அருமை
நல்லாயிருக்கு MK
Arumai
Arumai
இதைப் படித்ததும் ஏனோ மனுஷ்யபுத்திரனின்
மரக்கால்களுக்குத்
தாம் வேர்களோடும்
பச்சையத்தோடும் இருந்த
நினைவுகளின்
வருத்தமிருக்குமா?
எனும் கவிதை நினைவுக்கு வந்தது.
நாம் நம்மை ஒவ்வொரு லேயராக மூடிக் கொண்டு மூடிகொண்டு பெருத்து விடுகிறோம், அதனால் ”ஆதி”யை கண்டுபிடிக்க இயலாமல் தவிக்கிறோம்.
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாதது வெங்காயம்.
மனிதனும் அப்படித்தான்.
ஒவ்வொருவனுக்குள் இருப்பது நிசப்தமான புலப்படாத அருவம். அதன் உருவம் கண்டுபிடிப்பவனே சிறந்தவனாகிவிடுகிறான்.
உலகின் பல ஓவியங்கள் நிர்வாணமாகத்தான் வரையப்பட்டது. அங்க உணர்ச்சிகளுக்காக மட்டுமல்ல, கூச்சமற்ற நிர்வாணம் புலப்படாத உருவத்தை வெளியே எடுத்துக் கொடுக்கும் என்பதாலும் கூட.
கவிதைக்கு வாழ்த்துகள் மண்குதிரை!!
நீங்கள் வைத்த கேள்வியில் இருந்து இன்னுமொரு சித்திரமும் கவிதையும் விரிகிறது மண்குதிரை
நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க மண்குதிரை.
நன்றி லாவண்யா
நம் இருப்பை ஒரு சித்திரமாக வெளியிலிருந்து யாரேனும் பார்க்க நேர்ந்தால் ...அது வெண்பனி சூழ இருக்குமா?
பனி நம் பார்வையிலா? இல்லை சித்திரத்தை சூழ்ந்தா?
எதனுள்ளும் சித்திரம் தெளிவாய் தானே இருக்கும்?
Post a Comment