
எந்தப் புள்ளியைப் பற்றியும்
சுழலவில்லை
சுழற்றுவதற்கான
கூர்மைகொண்ட முனையில்லை
காத்திரம் மிகுந்த சரித்திரமில்லை
கசப்புநதி பாயும் நிலங்களில்லை
மிதமான ஒளி பெய்யும்
இதமான இரவுகளிலும்
கோப்பைகளின்றி
பரிமாறிக்கொள்ள எதுவுமில்லை
காற்றிலேறி எவரையும் சாட
எத்தனிப்பில்லை
ஆகாயம் பூமி
அந்த அடிவானப் பளபளப்பு
கடல் விண்மேகம்
ஒரு காலையின் பரிசுத்தம்
சிறுதூறல் நீர்நிலை
பெரிய மலையின் ஸ்திரமான மெளனம்
ஒரு கூழாங்கல்லின் நேர்த்தி
மிகச் சிறிய அஃறிணைகளின் வாழ்வியல் நம்பிக்கைகள்
எதுவுமே இல்லை
கடந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சொல்லச் சொல்லி கேட்குமென்றுதான்
என் நண்பர்களே.
10 comments:
அடேயப்பா ... சட் சட்னென்று வேறு வேறு தளத்திற்கு மாற்றிகொண்டே செல்கிறது உங்களின் கவிதை
(உ.ம்)
//பெரிய மலையின் ஸ்திரமான மெளனம்//
மலை உச்சியில் நிதானிக்க வைக்கிறது. அடுத்த கணம்
//ஒரு கூழாங்கல்லின் நேர்த்தி// மலையின் ஏதேனும் ஒரு பகுதியில் அமரவைக்கிறது
//கடந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சொல்லச் சொல்லி கேட்குமென்றுதான்
என் நண்பர்களே.//
என்ன தவம் செய்தோம் நண்பா. ...
வாழ்த்துகளுடன் அன்பும் நண்பா. ...
நல்லா இருக்கு.
அனுஜன்யா
ம்ம்.. அருமை.
ரொம்ப நல்லாயிருக்கு.
ரொம்ப நல்லா இருக்கு நண்பா
நல்லாயிருக்கு MK
கவிதை நல்லா இருக்கு. காலசுவடில் வந்திந்திக்கா? வாழ்த்துகள்
வேல்கண்ணன், அனுஜன்யா, வாசுதேவன், கீதா, யாத்ரா, அசோக், லாவண்யா அனைவருக்கும் என் நன்றி.
Post a Comment